Last Updated:Aug 03, 2026 9:13 AM IST
“பிரதமர் மோடி இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார் என நம்பும் நீங்கள் ஏன் வெளிநாட்டில் வசிக்கிறீர்கள்..?” - ராஜ் தாக்கரே

பிரதமர் மோடியின் வளர்ச்சி குறித்து பேசும் மாதவன், விவேக் ஓபராய் போன்றவர்கள் ஏன் இந்தியாவில் வசிக்காமல், துபாயில் வசிக்கிறார்கள்? என ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா நவநிர்மா சேனா அமைப்பு தலைவர் ராஜ் தாக்கரே பேசுகையில், “பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், பிரதமர் மோடி குறித்து படம் எடுத்து, அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், அவர் இந்தியாவில் வசிக்காமல் துபாயில் வசிக்கிறார். பிரதமர் மோடியை புகழும் நடிகர் மாதவன் எங்கு வாழ்கிறார்..? துபாயில் இருக்கிறார்.
ஆக நீங்கள் இந்தியாவை அதிகம் நேசிப்பவர், பிரதமர் மோடியை நீங்கள் நேசிப்பவராக இருந்தால், மோடி இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்பவர் என்று நீங்கள் நம்பினால், எதற்கு அந்நிய நிலத்தில் சென்று வாழ்கிறீர்கள்? ஏன் நீங்கள் துபாயில் குடும்பத்துடன் வசிக்கிறீர்கள்..? இந்த நடிகர்கள் ‘துரந்தர்’ போன்ற அரசுக்கு ஆதரவான படங்களில் நடித்துவிட்டு வெளிநாட்டுக்கு பறந்துவிடுகிறார்கள்” என விமர்சித்துள்ளார்.
மேலும், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில், தன்னையும் தன் தாயையும் இழிவாக பேசியது குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்த மோடி, அவர்களை மன்னிப்பதாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜ் தாக்கரே, “பிரதமர் மோடியின் கருத்துடன் உடன்படுகிறேன். யாரும் இப்படி தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. ஆனால், இதை முதலில் தன் கட்சியினரிடம் தான் பிரதமர் மோடி சொல்ல வேண்டும்” என்றார்.

இந்தோனேசியா | 250 பேர் பயணித்த பயணிகள் கப்பலில் தீ விபத்து... நேர்ந்த சோகம்!
இந்தோனேசியாவில் 250 பயணிகள் சென்ற கப்பலில் தீ விபத்து
கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருந்து சென்ற கப்பலில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்கிறது.
.png)



English (US) ·