நன்னன் குடி நடத்திய நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா மேனாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பங்கேற்பு-பரிசு வழங்கி சிறப்புரை

1 month ago 7

சென்னை, ஆக. 2– நன்னன் குடி நடத்திய நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா-23இல் [காலம்-30.7.2026 மாலை 6 மணி] 1.இவர்தாம் பெரியார்(வரலாறு)-பெரியாரும் காங்கிரசும் 2.முரசில் நன்னனின் ஒலி 3.தன்மான வாழ்வே நல்வாழ்வு (சிறுகதைகள்) 4.என தருமை அம்மாச்சி ஆகிய நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கான தமிழைத் தமிழாக்குவோம் தேர் வுகள் – பரிசுகள். பகுத்தறிவு, பிறமொழி கலவாத சிறுகதைப் போட்டி – பரிசுகள், திராவிடர் கழகம் தேர்ந்தெடுத்துக் கொடுத்த உயர்திணை வாழ்விணையர் அய்வருக்கு போற்றியும் பரிசும், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்.

மேனாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை வழங்கினார். புதுவை இளவரசி சங்கர் நூல் திறவுரை ஆற்றினார். நன்னன் குடி வேண்மாள் வரவேற்புரை வழங்கிட நன்னன் குடி அவ்வை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இவ்விழாவுக்கு திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துரை வழங்கி இருந்தார்கள். ஆசிரியர் கி.வீரமணி, வீ.அன்புராஜ், கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி இருந்தனர்.

Read Entire Article