Viswanath & Sons: ``நான் எந்த அவார்ட் வாங்குனாலும் அவர் தான் முதல்ல வாழ்த்துவார்" - ஜி.வி பிரகாஷ்

1 month ago 10

`சூரரைப் போற்று எனக்கும் சூர்யா சார்க்கும் ரொம்ப லக்கியான படம்" - ஜி.வி பிரகாஷ்

Published:1 min agoUpdated:1 min ago

G.V.Prakash

G.V.Prakash

'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட். 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜீ.வி பிரகாஷ், ``இந்த வாய்ப்பை அளித்ததற்கு திரு. நாகவம்சி அவர்களுக்கு மிகுந்த நன்றிகள். நாங்கள் இணைந்து பணியாற்றிய 'வாத்தி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. திரு. பிரேமா லிங்குசாமி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

நடிகர் சூர்யா சாருடன் 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து பணியாற்றும் திரைப்படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இத்திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 'சூரரைப் போற்று' திரைப்படம் எனக்கும் சூர்யா சாருக்கும் மிகவும் அதிர்ஷ்டமான படம். ஏனெனில், எங்கள் இருவருக்கும் முதல் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அப்படம் தான்.

Viswanath & Sons

Viswanath & Sons

நான் தேசிய விருது பெற்றபோது சூர்யா சாரும் ராஜா சாரும் எனக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகளைச் செய்தனர். அந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன், சூர்யா சாருக்கு மிக்க நன்றி.

'வாத்தி' திரைப்படத்தில் நானும் வெங்கி சாரும் இணைந்து பணியாற்றியபோது தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைத் தந்த நாம், தற்போது மூன்றாவது முறையாக 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் இணைந்துள்ளோம்.

சூர்யா சார் என்னை மிகவும் ஊக்குவித்து, இன்று சிறப்பாக 'தி ஒன்' (The One) பாடலை வெளியீடு செய்ய உள்ளோம். இப்பாடலை நான் சூர்யா சாரின் ரசிகர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

நடிகை மமிதா மிகவும் எளிமையான நபர். அவருடைய அன்பின் காரணமாகவே பலர் அவருடைய நடனத்தை மீண்டும் செய்து பார்க்க முயற்சிக்கின்றனர்.

ராதிகா மேடத்திற்கும் சுரேஷ் அவர்களுக்கும் நன்றி. சுரேஷ் சாரின் ரசிகர்கள் தவறாமல் உங்கள் குடும்பத்துடன் வந்து, இந்தத் திரைப்படத்தை உற்சாகத்துடன் திரையரங்கில் கண்டு களியுங்கள்.

G.V.Prakash

G.V.Prakash

எனது பாடலாசிரியர்கள் அருண் ராஜா, கென், பாலாஜி, வேணுகோபால் மற்றும் காதர் ஆகிய அனைவருக்கும் நன்றி. கடந்த 25 ஆண்டுகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் தான். நான் இசையமைத்த 'சைவம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அழகே அழகே' பாடலுக்காக அவர் தேசிய விருது பெற்றார்.

பாடும் திறனால் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் சங்கர் மகாதேவன். இசைத்துறையில் எனது முன்மாதிரி (Icon) எப்போதும் ஏ.ஆர். ரஹ்மான் சார் தான். நான் எந்த விருது பெற்றாலும் அவர்தான் முதன்முதலில் எனக்கு வாழ்த்திப் பதிவிடுவார்." என்றார்.

Read Entire Article